தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்தத்தின்போது

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்தத்தின்போது போராட்டக்காரர்களுக்குக் கிடைத்த ஆதரவைவிட, இந்த ஆண்டு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கேடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடப்பதால் நாட்டில் அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.

பாரத் பந்த்: தொடங்கியது வேலைநிறுத்தப் போராட்டம்; செவிசாய்க்குமா மத்திய அரசு?

அதே நேரத்தில் இப்போதைய நேரத்தில் பெரும்பாலான அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து தொழிலாளர்களைப் பாதிக்கும் வகையிலே சட்டங்களை மத்திய அரசு இயற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பந்த் அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகளவில் போராட்டங்கள் நடக்கும் என எதிர்க்கட்சி தரப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.